உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

ஹவாலா பணம் ரூ.​ 42 லட்சம் அமலாக்கப் பிரிவிடம் ஒப்படைப்பு

 கடலூர்:

                      கடலூரில் 5 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹவாலா பணம் ரூ.​ 42 லட்சம்,​​ வருமான வரித்துறை அமலாக்கப் பிரிவிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்தில் கடந்த 3-ம் தேதி போலீஸôர் ரோந்துப் பணியில் இருந்தபோது,​​ சந்தேகப்படும் நிலையில் நின்றிருந்த நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த அல்பைசல் ​(32),​ திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரைச் சேர்ந்த அஷ்ரப் அலி ​(54),​ சென்னை ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த ஈஸ்வர் ​(42),​ திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகுபர் சாதிக் ​(44),​ ஜாகீர் உசேன் ​(39) ஆகிய 5 பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் இருந்து ஹவாலா பணம் ​(கணக்கில் வராதது)​ ரூ.​ 42 லட்சம் கைப்பற்றப்பட்டது.​ 5 பேரும் கைது செய்யப்பட்டு கடலூர் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டனர்.​ அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சுந்தரம் உத்தரவிட்டார்.போலீஸ் கைப்பற்றிய பணம் குறித்து ​ வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

                    அதைத் தொடர்ந்து அமலாக்கப்பரிவு உதவி இயக்குநர் கபீர்தாஸ் தலைமையில் 4 அதிகாரிகள் கொண்ட குழு கடலூர் வந்து,​​ சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 பேரிடமும் விசாரணை நடத்தியது.​ கைப்பற்றப்பட்ட ரூ.​ 42 லட்சத்தை ஆய்வு செய்ய அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.​ மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுந்தரம்,​​ அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து ரூ.​ 42 லட்சமும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்குக் கொண்டு போகப்பட்டது.​ இந்தப் பணம் யாருடையது எந்த வங்கியில் இருந்து,​​ யாரால் பணம் எடுக்கப்பட்டது ​ போன்ற ​ தகவல்களை அமலாக்கப் பிரிவு சேகரிக்க இருக்கிறது. இந்நிலையில் கைதான 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க,​​ அமலாக்கப் பிரிவு அலவலர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டு உள்ளனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior