உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

கொள்ளை வழக்கில் கைதானவரிடம் போலீஸ் விசாரிக்க கோர்ட் அனுமதி


கடலூர்: 

                        கடலூர் அருகே நல்லாத்தூர் தி.மு.க., பிரமுகர் வீட்டில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப் பட்டார். அவரிடம் வரும் 12ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை செய்ய கடலூர் கோர்ட் அனுமதியளித்துள்ளது. கடலூர் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந் தவர் சுப்புராம்(60). தி.மு.க., பிரமுகர்.

                         இவரது வீட்டில் கடந்த 13ம் தேதி இரவு ஐந்து பேர் கொண்ட கும்பல் திருமண அழைப்பிதழ் கொடுப் பது போல் சென்று வீட்டில் இருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பீரோவை உடைத்து, அதிலிருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 சவரன் நகை, வைரக்கம்மல், 18 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு சுமோவில் தப்பிச் சென்றனர். தூக்கணாம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

                             இந்த வழக்கு தொடர்பாக சென்னை திருவள்ளூர் பேச்சியப்பன்(24) என்பவரை போலீசார் கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும், சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டியள்ளதால் பேச்சியப்பனை போலீஸ் காவலில் விசாரணை செய்ய முடிவு செய்து கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சுதா, பேச்சியப்பனை போலீஸ் காவலில் வைத்து வரும் 12ம் தேதி வரை விசாரணை செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior