உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

கடலூர் மாவட்டத்தில் 3 நாள் நிதி நிலை விளக்க கூட்டங்கள்


கடலூர்: 

                    கடலூர் மாவட்டத்தில் 2010-2011ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள் 3 நாட்கள் நடக்கிறது. 

இது குறித்து தி.மு.க., மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை: 

                     2010-2011ம் ஆண்டிற் கான நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங் கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள் கீழ்கண்ட விவரப்படி நடக்கிறது. மங்களூர் ஒன்றியத்தில் 10ம் தேதியும், கம்மாபுரத்தில் 11ம் தேதியும், குறிஞ்சிப்பாடியில் 12ம் தேதியும் நடக்கும். கூட்டத்தில் டாக்டர் காஞ்சனா கமலநாதன் பேசுகிறார். புவனகிரி, கீரப்பாளையம், பண்ருட்டி நகரம் முறையே 10, 11, 12 தேதிகளில் செங்கை சந்தானம் பேசுகிறார். விருத்தாசலம் ஒன்றியம், நல்லூர், விருத்தாசலம் நகரம் 10, 11, 12ம் தேதிகளில் கோவை சம்பத் பேசுகிறார். பண்ருட்டி ஒன்றியம், அண்ணாகிராமம், கடலூர் ஒன்றியத்தில் முறையே 10, 11, 12 தேதிகளில் தமிழ் பேரின்பன் பேசுகிறார். பரங்கிப்பேட்டை ஒன்றியம், குமராட்சி ஒன்றியம், கடலூர் நகரம் ஆகிய இடங்களில் முறையே 10, 11, 12 தேதிகளில் தாம்பரம் ஏகாம்பரம் பேசுகிறார். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior