உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

பண்ருட்டியில் போலி டீத்தூள் பறிமுதல்


பண்ருட்டி: 

                         பண்ருட்டியில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் இரு வீடுகளில் 7.5 கிலோ போலி டீத்தூளை கைப்பற்றினர். பண்ருட்டியில் போலி டீ த்தூள் விற்பனை அதிகளவு நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில் பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் ஆய்வா ளர்கள் மணிகண்டன்,சுதாகர், மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், பொது சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்கள் கணேசன், சீத்தாராமன் ஆகியோர் கொண்ட குழுவினர் கந்தசாமி தெருவில் உள்ள குமார், அருள்ஜோதி நகர் ராஜ்குமார் ஆகிய இரு வீடுகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் குமார் வீட்டில் இருந்து 6.5 கிலோ போலி டீத்தூளும், ராஜ்குமார் வீட்டில் இருந்து 1 கிலோ போலி டீ த்தூளையும் கைப்பற்றினர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior