உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 09, 2010

கணவனை இழந்த பெண்களுக்கு உதவித் தொகை வழங்கல்


குறிஞ்சிப்பாடி: 

                              விவசாய தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கணவனை இழந்த 4 பெண்களுக்கு உதவித் தொகையை தாசில்தார் வழங்கினார். குறிஞ்சிப்பாடி வட்டாரம் கல்குணத்தை சேர்ந்த மணி, குமார், சவுந்தர்ராஜ், ஆரோக்கியராஜ் ஆகியோர் இறந்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு விவசாய தொழிலாளர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தாசில்தார் பெரியநாயகம் வழங்கினார். துணை தாசில்தார் ராமலிங்கம், வி.ஏ.ஓ., ஞானதேசிகன் உடனிருந்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior