உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.88 லட்சம்

சிதம்பரம்:

                     சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் தொகை எண்ணப்பட்டதில் ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 66  காணிக்கையாக வந்துள்ளது தெரியவந்தது. இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆர்.ஜகந்நாதன், செயல் அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை 5 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. 5 உண்டியல்களில் ரூ. 2,88,066 மற்றும் பத்தொன்பதரை கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி  இருந்தது. இக் கோயிலில் 3 மாதத்துக்கு ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. கடந்த முறை எண்ணியதில் ரூ. 1 லட்சத்து 88 ஆயிரத்து 661 கிடைத்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior