உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

உயர் கல்வியில் நுகர்வோர் பாதுகாப்பு பொதிகை "டிவி'யில் இன்று ஒளிபரப்பு

கடலூர் : 

            உயர் கல்வியில் நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சி பொதிகை "டிவி' யில் இன்று ஒளிபரப்பாகிறது.

இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               மாநில அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் பொதிகை "டிவி'யில் நுகர்வோர் விழிப்புணர்வு கேள்வி நேரம் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 24ம் தேதி பகல் 12.05 முதல் ஒரு மணி வரை "உயர் கல்வியில் நுகர்வோர் பாதுகாப்பு' என்ற தலைப்பில் கேள்வி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு நுகர் வோர் பாதுகாப்பு துறை, பல்லைக்கழக மாணவர் ஆலோசனை மையம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தொழில் நுட்பக் கல்வி இயக்குனரக உயர் அதிகாரிகள் மற்றும் தன்னார்வபாதுகாப்பு ஆர்வலர்கள் பதில் அளிக்க உள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior