உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

ரூ.5 கோடி செலவு செய்யப்பட்ட புறவழிச்சாலை பாழாகும் அவலம்

கடலூர் : 

                கடலூர் ஜவான்ஸ் பவன் புறவழிச்சாலையாக மாற்றும் நிதி பற்றாக் குறையால் தார் சாலை பணி கிடப்பில் போடப் பட்டுள்ளது.

                கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஜவான்ஸ் பவன் கட்டடத்தில் இருந்து செம்மண்டலம் வரையிலான கெடிலம் ஆற்றங்கரையில் புறவழிச் சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. மேலும், மழைக் காலத்தில் கெடிலம் ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் அருகில் உள்ள சுப்ராயலு நகர், நெடுஞ்சாலை நகர், குப்பன் குளம் நகர்கள் நீரில் மூழ்கி தத்தளிக்கும் நிலையை தவிர்ப்பதற்காகவும் சுனாமி நிதியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து 1.8 கி.மீ., நீளத்தில் பொதுப்பணித்துறை 40 லட்ச ரூபாய் மதிப்பில் அகலமான சாலை அமைத்தது. இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறை ஒன்னரை கருங்கல் ஜல்லி போடப்பட்டதோடு சரி. அதன் பிறகு இச்சாலையை கண்டு கொள்ளவில்லை. 5 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்ட இச்சாலை தார் சாலை அமைப்பதற்கான நிதி இல்லாததால் பணிகள் நடைபெறாததால் சாலை மக்களுக்கு பயன்படாமல் உள்ளது.

                   இந்நிலையில் தற்போது பெய்த மழையினால் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக தண்ணீர் தேங்கி மோசமான நிலையில் உள்ளது. இனியும் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனில் இதற்காக செலவழிக்கப்பட்ட 5 கோடி ரூபாயும் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior