உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு

விருத்தாசலம் : 

                 விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் ஆண்டு ஆய்வு செய்து நலதிட்ட உதவிகள் வழங்கினார்.

                  ஆய்வின் போது அலுவலகத்தில் ஆவணங்கள் பராமரிப்பு, பதிவேடுகள், அலுவலக செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் 18 பேருக்கு முதியோர் உதவி தொகை, 2 பேருக்கு திருமண உதவித் தொகை, விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் ஜெயராமன், திட்டக்குடி தாசில்தார் கண்ணன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், சமூக நல திட்ட தாசில்தார்கள் பத்மாவதி, சையத் ஜாபர், ஆர்.ஐ., ராஜ்குமார், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரன் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior