உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

டி.புதுப்பாளையத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது பத்து நாட்களாக இருளில் மூழ்கியது கிராமம்

கடலூர் : 

             பழுதடைந்த டிரான்ஸ் பார்மரை சரி செய்யாததால் 10 நாட்களாக டி.புதுப்பாளையம் இருளில் மூழ்கியது.

                   கடலூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தில் 700க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த 10 நாட்களுக்கு முன் பழுதடைந்தது. இது குறித்து அருகில் உள்ள எஸ்.புதூர் மின் வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும் இதுவரை சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. மேலும் போர் வெல் இயக்க முடியாததால் குடிநீருக்கும் அல்லாடி வருகின்றனர். மாணவ, மாணவிகளும் இரவு நேரத்தில் படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 

                  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் 2 நாட்களில் சரி செய்யப்பட்டது. பின்னர் திருவிழாவின் போது தெரு விளக்கு மற்றும் அலங்கார விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதால் அதிக மின்திறன் சுமை தாங்காமல் மீண்டும் பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் 2 டிரான்ஸ்பார்மர்கள் வைக்க ஏற்பாடு செய்ததுடன் விரைவில் சரிசெய்து மின்சாரம் வழங்கப்படும்' என தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior