உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

மேட்டூர் அணை 28-ல் திறப்பு

              மேட்டூர் அணை ஜூலை 28-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

           தமிழகத்தில் ஆடிப் பெருக்கு விழா ஆகஸ்ட் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒட்டி, மேட்டூரில் இருந்து காவிரியில் ஜூலை 28-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். அதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்காக தண்ணீர் விடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். 

நீர்மட்டம்: 

                மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.02 அடியாக உள்ளது. 43.99 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீரவரத்து வினாடிக்கு 1,003 கன அடியாக உள்ளது. அதேசமயம் 1,004 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior