உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

சிதம்பரம் அருகே கணவரை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் ஸ்டேஷன் முன் பெண் தர்ணா


சிதம்பரம் : 

                கணவரை கண்டு பிடித்துத் தரக்கோரி கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்ததால், போலீஸ் ஸ்டேஷன் முன், பெண் தர்ணாவில் ஈடுபட்டார். 

          சிதம்பரம் கொள்ளுமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி. இவரது மனைவி பாப்பாத்தி என்கிற பாத்திமா (24). இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் முத்துமாணிக்கம் தெருவில் வசித்து வந்தனர். 

             இந்நிலையில், சீர்காழியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் முகமது அன்சாரிக்கு பழக்கம் ஏற்பட்டு, அந்த பெண்ணுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் தவித்த பாத்திமா, தனது கணவரை கண்டுபிடித்துத் தரக்கோரி, நேற்று சிதம்பரம் மகளிர் போலீசில் புகார் கொடுக்கச் சென்றார். போலீசார் புகாரை வாங்க மறுத்ததால் போலீஸ் ஸ்டேஷன் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடன் போலீசார், பாத்திமாவை சமரசம் செய்து மனுவை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். பெண், திடீர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior