உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

என்எல்சியில் புதிய மின்துறை இயக்குநர்

நெய்வேலி:
 
         என்எல்சியின் புதிய மின்துறை இயக்குநராக ஜே.மகிழ்செல்வன்  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
         என்எல்சி நிறுவனத்தின் மின்துறை இயக்குநராக பணியாற்றிய வி.சேதுராமன் கடந்த மே மாதம் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய மின்துறை இயக்குநராக ஜே.மகிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவை மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. மகிழ்செல்வன் என்எல்சி நிறுவனத்தில் கடந்த 1975-ம் ஆண்டு இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்து பின்னர் படிப்படியாக உயர்வுபெற்று, என்எல்சி அனல்மின் நிலையங்களில் தலைமைப் பொதுமேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது மின்துறை இயக்குநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior