உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை

சிதம்பரம் :

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தூக்கு போட்டு இறந்தார். 

              ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஷ்குமார் தாகூர் மகன் நிகேஷ்குமார்தாகூர் (19). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினிரிங் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந் தார். இவர் சிதம்பரம் முத்தையா நகர் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்தார். இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர டி.எஸ்.பி., மூவேந்தன், சப் இன்ஸ்பெக்டர் மணவள்ளி உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் உடலைக் கைப்பற்றி  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior