உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

நெல்லிக்குப்பம் அருகே அனுமதியின்றி சென்ற ஷேர்ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு

நெல்லிக்குப்பம்:

                அனுமதி இல்லாமல் நெல்லிக்குப்பம் வரை வந்த இரண்டு ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலூரில் இருந்து நெல்லிக்குப்பத்திற்கு கடந்த சில நாட்களாக அதிகமான ஷேர் ஆட்டோக்கள் வந்து செல்கின்றன. கன்னியக்கோவில், திருவந்திபுரம் சாலைகளில் ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதி பெற்றவர்கள் சட்டத்திற்கு புறம்பாக நெல்லிக்குப்பம் நகரம் வரை இயக்கினர். அனுமதி இல்லாத ஷேர் ஆட்டோக்களை இயக்குவதை தடுக்க வேண்டுமென போலீசில் புகார் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாத, இரண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior