உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

குவைத்தில் சித்ரவதைக்கு ஆளான கணவரை மீட்டுத்தரக் கோரி கடலூர் கலெக்டரிடம் மனைவி மனு

கடலூர் : 

            குவைத்தில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ள கணவரை மீட்டுத் தரக்கோரி, கலெக்டரிடம் மனைவி மனு கொடுத்துள்ளார். 

கடலூர் வில்வநகர் ஆனந்தஜோதி, கலெக்டர் சீத்தாராமனிடம் அளித்துள்ள மனு:

              விருத்தாசலம் ஜாகீர்பாய், மணிமாறன் ஆகியோர் உதவியுடன் ஆடுதுறை அடுத்த பண்டாரஓடையைச் சேர்ந்த சபி மற்றும் அவரது தாயாரும் சேர்ந்து எனது கணவர் ராமுவிற்கு குவைத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக சபியின் தாயார், 30 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார். பின் விசா வந்ததும் விமான டிக்கெட்டுக்காக 35 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு தோட்ட வேலைக்கு அழைத்துச் சென்றனர். 

               அங்கு காலை 7 முதல் இரவு 7 மணி வரை கார் கழுவும் வேலையையும் இரவு 7 முதல் 10 மணி வரை தோட்ட வேலை செய்யச் சொல்லியும் துன்புறுத்தியுள்ளனர். ஒரே ஒரு வேளை மட்டும் இரண்டு சப்பாத்தி சாப்பிட கொடுத்து கொடுமைப்படுத்தியதாகவும் தமிழகத்திற்கு அனுப்பி விடுங்கள் என, சபியிடம் கேட்டதற்கு வேலையையும் பறித்து நடுரோட்டில் அனாதையாக விட்டு விட்டதாக எனது கணவர் என்னிடம் போனில் கூறி அழுதார். இந்நிலையில், திடீரென சபி எனக்கு போன் செய்து உன் கணவரை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டுமானால் என் தாயிடம்  20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறினார். நான் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறேன். எனவே எனது கணவரை மீட்டு அவரை ஏமாற்றி அழைத்துச் சென்று கொடுமைப் படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior