உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

கிராம பூசாரிகள் பேரவை: கடலூரில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

            கிராம பூசாரிகளுக்கு நலவாரியம் அமைத்து சலுகைகள் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கிராம பூசாரிகள் பேரவை சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம கோவில் பூசாரிகள் நலவாரியம் ஏற்படுத்தவேண்டும், நலவாரிய சலுகைகளை வழங்கவேண்டும். முதியோர் ஓதியம் 750 ரூபாய் வழங்கவேண்டும்.

               ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும். அரசின் கட்டுப்பாட் டில் உள்ள கோவில்களில் உள்ள பூசாரிகளுக்கு அரசின் நலவாரிய சலுகைகளை வழங்கவேண்டும். ஒரு கால பூஜை திட்ட நிதியை உயர்த்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். கடலூர் ஒன்றிய அமைப் பாளர் பன்னீர் வரவேற்றார். மாநில இணை அமைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். பரங்கிப்பேட்டை ஒன்றிய அமைப்பாளர் திருஞானம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior