உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

சி.என்.பாளையம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி:அதிகாரிகளே திருத்தம் செய்ய மக்கள் கோரிக்கை

நடுவீரப்பட்டு:

              வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடியை அதிகாரிகள் திருத் தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

                 இதில் பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி பாகம் எண் 1 வாக்காளர் பட்டியலில் நடுத்தெரு, சவலை தெரு, பெருமாள் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, காமாட்சிப் பேட்டை குயவர் தெரு, வினாயகர் கோவில் தெரு, மெயின்ரோடு மற்றும் யாதவர் தெரு, கடைவீதி, தோப்பு தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகியவைகள் உள்ளன.தற்போது வெளியிடப் பட்டுள்ள பட்டியலில் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந் தவர்களின் பெயர்கள் வரிசை எண் 788 முதல் 819 வரை காமாட்சிப் பேட்டை தெருவைச் சேர்ந்தவர்களின் பட்டியலுடன் சேர்ந்துள்ளது. காமாட்சிப்பேட்டை வார்டு எண் ஒன்றிலும், காமாட்சி அம்மன் கோவில் தெரு வார்டு எண் மூன்றிலும் உள்ளது. 

                  தேர்தலில் 1, 2 ஆகிய வார்டுகளுக்கு வாக்குச் சாவடி, கடை வீதியில் உள்ள நடுநிலைப் பள்ளியிலும், 3, 4, 5 ஆகிய வார்டுகளுக்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஓட்டளித்து வருகின்றனர். தற்போது உள்ள குளறுபடியால் வரும் தேர்தலில் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் எந்த ஓட்டுச்சாவடிக்கு செல்வது என்ற குழப்ப நிலை ஏற்படும். இந்நிலையில் வாக் காளர் பட்டியலில் உள்ள தவறை திருத்தம் செய்ய போட்டோ மற்றும் விண் ணப்பம் எழுதி கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதிகாரிகள் செய்த தவறுக்கு நாங்கள் எதற்கு போட்டோ எடுத்து மனு எழுதிக் கொடுக்க வேண்டும். அதிகாரிகளே திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior