உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

மின்னொளி கூடைப்பந்து போட்டி:ஆரோவில் பெண்கள் அணி வெற்றி


கடலூர்:

             கடலூரில் நடந்த மின்னொளி கூடைப் பந்து விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஆரோவில் அணியும், ஆண்கள் பிரிவில் எச்.டி. எப்.சி., அணியும் வெற்றி பெற்றன.

                 கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த மின்னொளி கூடைப் பந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தலைமை தாங்கினார். கடலூர் கூடைப்பந்து கழகத் தலைவர் ரமேஷ் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கூடைபந்து கழக துணைத் தலைவர் இளங் கோவன் வரவேற்றார்.வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்.எல்.ஏ., அய்யப்பன் கோப்பை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். துணை சேர்மன் தாமரைச்செல்வன், கவுன்சிலர் இளங்கோ, முன்னாள் கவுன்சிலர் செந்திக்குமார், ஆதிபெருமாள், ராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கடலூர் மாவட்ட கூடைப் பந்து கழக துணை செயலாளர் சிட்டிபாபு நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior