உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

விருத்தாசலம் அருகே கோஷ்டி மோதல்: 12 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்: 

          கோவில் திருவிழாவில் ரசிகர் மன்ற போர்டு வைப்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

              விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் இரு நடிகர்களின் ரசிகர் மன்றம் சார்பில் போர்டு வைப்பதில் மூர்த்தி மகன் சுப்ரமணியன் (22) கோஷ்டிக்கும், பழனி மகன் சிலம்பரசன் (20) கோஷ்டிக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில் சுப்ரமணியன், முனியன், சிலம்பரசன் ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து பாண்டிதுரை, சிலம்பரசன், முனியன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior