உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

திட்டக்குடி அருகே இரு தரப்பினர் மோதல் 58 பேர் மீது வழக்குப் பதிவு

திட்டக்குடி: 

           திட்டக்குடி அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 58 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

              திட்டக்குடி அடுத்த தொளார் காலனியைச் சேர்ந்த மாணவர் வீரமணி (17) மற்றும் அவரது நண்பர்களை கடந்த 4ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாக்கினர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசன் (22), மணிகண்டன் (20) ஆகியோரை கைது செய்தனர். நேற்று முன்தினம் தொளார் காலனியில் ஆனந்தராஜை (21) கைது செய்யச் சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் வேன் கண்ணாடி உடைந்து சப் இன்ஸ்பெக்டர் பழனி காயமடைந்தார். இதற்கிடையே மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினர் மற்றும் போலீசார் மீது கல்வீசி தாக்கியவர் கள் என 58 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior