உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

கடலூர் வட்டாரத்தில் சம்பா பருவத்திற்கு மானியவிலையில் விதை நெல்

கடலூர்: 

          கடலூர் வட்டாரத்தில் மானிய விலையில் சம்பா பருவ விதை நெல் வினியோகம் செய்யப்படுகிறது என வேளாண் உதவி இயக்குனர் கூறியுள்ளார்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

           ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடப்பு சம்பா பருவத்திற்கான சான்று பெற்ற நெல் ரக விதைகள் பொன் மணி, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, பி.பி.டி.5204, ஏ.டி.டி.39. உயர் விளைச்சல் கலப்பின ரகமான கே.ஆர்.எச். 2 ஆகிய ரகங்கள் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகின்றன.ஒரு கிலோ விதை நெல் 5 ரூபாய் மானியம் வீதம் வழங்கப்படுகிறது. 

          கடலூர் வட்டாரத்திலுள்ள கடலூர், கீழ்குமாரமங்கலம் மற்றும் தூக்கணாம் பாக்கம், வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் ரக சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றன. விவசாயிகள் மானிய விலையில் அரசின் சான்று பெற்ற விதைகளை வாங்கிப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior