உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

கடலூர் நகராட்சியில் 1,900 நாய்களுக்கு கருத்தடை

கடலூர்:

           கடலூர் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் 1,900 தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் அண்மையில் தொடங்கியது.

           கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தெருவுக்கு 10க்கும் குறையாமல் நாய்கள் உள்ளன. இந்த நாய்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். நாய்க்கடிக்கு ஆளாகி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு மட்டும் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்று, அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

           எனவே நாய்க்கடிப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று நகராட்சிக் கூட்டங்களில் உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எனவே நாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கடலூர் நகரில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து வந்து கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து விட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது கடலூரில் கருத்தடை செய்யாத நாய்கள் 1,900 இருப்பதாக கால்நடைத் துறை கணக்கெடுத்து அறிவித்து உள்ளது. அதன்படி 1,900 தெரு நாய்களுக்கும், தலா |445 செலவில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. 1-வது, 2-வது வார்டுகளில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடந்தது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமார் வெள்ளிக்கிழமை கூறியது:

                 கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்ய நாய் ஒன்றுக்கு |445 செலவிடப்படுகிறது. இதில் |60 வீதம், அறுவைச் சிகிச்சை செய்யும் கால்நடை மருத்துவருக்கு வழங்கப்படுகிறது. 2009-ம் ஆண்டு வரை கடலூரில் 1,926 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு இருக்கிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களைத் தெருக்களில் செல்லாதவாறு, அவற்றின் உரிமையாளர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆணையர். நாய்களுக்கு கருத்தடை செய்வதை நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஆணையர் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior