உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

பண்ருட்டியில் குண்டும் குழியுமான சாலைவாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி,: 

             பண்ருட்டியில் குண்டும் குழியுமாக சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

            பண்ருட்டி இந்திராகாந்தி சாலை வழியாக பஸ் நிலையத்தில் இருந்து நெய்வேலி, கும்பகோணம் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறமும் வடிகால் வசதிகள் இல்லாததால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. மேலும் இச்சாலையைஅதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பெரும்பாலான இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாவது நேர்கிறது. இவ்வழியே செல்லும் லட்சுமிபதி நகர், மேலப் பாளையம் உள்ளிட்ட நகரை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior