உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

எளிதில் சென்று வரக்கூடிய இடத்தில் உழவர் சந்தை அமைக்க கோரிக்கை

பண்ருட்டி:

           பண்ருட்டியில் செயல்படாமல் உள்ள உழவர் சந்தையை மக்கள் எளிதில் சென்று வரக்கூடிய இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

           பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் உழவர் சந்தை உள்ளது. நகருக்கு ஒதுக்கு புறமாக உள்ளதால் தொடங்கிய நாள் முதல் இச்சந்தை செயல்படவில்லை.இந்நிலையில் ஜூன் மாதம் பண்ருட்டி நகராட்சி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், உழவர் சந்தை செயல்படுத்துவதற்கு அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து பண்ருட்டி நகராட்சியில் கூட்டம் நடத்துமாறு வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வத்திடம் கூறினார்.

           தனைத் தொடர்ந்து உழவர் சந்தை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி நகராட்சி வளாகத்தில் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கடலூர் சாலையில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகம், கும்பகோணம் சாலை மற்றும் பஸ் நிலையம் அருகே ஆகிய இடத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம், பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டு மற்றும் ரயில்வேவுக்கு சொந்தமான இடம் இவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து அதில் உழவர் சந்தையை அமைத்தால் சிறப்பாக செயல்படும் என கருத்து தெரிவித்தனர்.

           தொடர்ந்து பேசிய கோட்டாட்சியர் முருகேசன் தற்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உழவர் சந்தையை அமைக்க வாய்ப்பு உள்ளது, ரயில்வே இடம், சார்பு நீதி மன்றம், கோயில் இடம் ஆகியவற்றில் அமைப்பதற்கு சில நடைமுறைப் பணிகள் உள்ளதால் கால அவகாசம் ஆகும். இருப்பினும் இக்கருத்துகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு சொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முருகேசன் கூறினார்.

                 கூட்டத்தில் நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், துணைத் தலைவர் கே.கோதண்டபாணி, வேளாண்மை துணை இயக்குநர் (வணிகம்) என்.தனவேல், அலுவலர் (வணிகம்) சுரேஷ், உழவர் சந்தை நிர்வாக இயக்குநர் வரதராஜன், வேளாண்மை உதவி இயக்குநர் ஹரிதாஸ், தோட்டக்கலை உதவி இயக்குநர் ராமலிங்கம், வியாபார சங்க செயல் செயலர் ராஜேந்திரன், காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜாஉதயகுமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுமதிசெல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior