உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

நரியன் ஓடை மண் கரையிலேயே கொட்டப்பட்ட அவலம்

நடுவீரப்பட்டு: 

          நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கரையில் மண் கொட்டியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

            நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஓடை ஆழப்படுத்தும் பணி நடந்தது. சி.என்.பாளையம் யாதவர் வீதி வழியாகத்தான் இந்த ஓடையில் இறங்கி சி.என்.பாளையம் நடுத்தெரு, யாதவர் தெரு, சொக்கநாதன் பேட்டை, காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தம் மற்றும் மற்ற பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த ஓடையை தற்போது ஆழப்படுத்தி தோண்டப்பட்ட மண் அனைத்தையும் அங்கேயே கொட்டி கரையை மலை போல் உயர்த்தி விட்டனர். 

                    இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வயதானவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்தால் மண் கரைந்து மீண்டும் ஓடைக்கே வரும் நிலை உள்ளது.மண் மேட்டை அகற்றி நடை பாதைக்கு வழி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior