உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

டி.எஸ்.பேட்டை மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண நிதி

கிள்ளை: 

             சிதம்பரம் அருகே டி.எஸ்.பேட்டையில் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக 225 குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

             மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. இதற்கு தடைக்கால நிவாரண நிதியாக குடும்பத்திற்கு தலா 500 ரூபாய் தமிழக அரசின் மீன் வளத்துறை மூலம் வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை 800 ரூபாயாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை அடுத்த டி.எஸ்.பேட்டை மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் விழா நடந்தது. 

                    ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மோகன்காந்தி வரவேற்றார். மீன்வள ஆய்வாளர் நாபிராஜ், மேற்பார்வையாளர் புண்ணியராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, மீன்வள உதவி இயக்குனர் இளம்பரிதி ஆகியோர் 225 குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வீதம் ஒருலட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வழங்கினர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாகிகள் கருணாமூர்த்தி, அன்பழகன், ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior