உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

கடலூரில் மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

கடலூர்:

        ஆயுதப்படை போலீசாருக்கான இலவச கண் சிகிச்சை முகாமை எஸ்.பி., துவக்கி வைத்தார்.

            கடலூரில் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் போலீசாருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. 

           புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடந்த இந்த முகாமை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் துவக்கி வைத்து, தனது கண்களை பரிசோதித்துக் கொண்டார். டாக்டர் பல்லவி தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் முகாமில் பங்கேற்ற 140 போலீசாரின் கண்களை பரிசோதித்தனர். அவர்களில் 25 பேருக்கு பார்வையில் குறைபாடு இருப்பதை கண்டறிந்து கண்ணாடி அணிய அறிவுறுத்தினர். முகாம் ஏற்பாடுகளை ஆயுதப்படை டி.எஸ்.பி., காமராஜ் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.

முகாமை துவக்கி வைத்த எஸ்.பி., கூறுகையில், "

               விரைவில் மாவட்டத்தில் போலீஸ் துறையில் பணியாற்றும் டிரைவர்களுக்கான கண் சிகிச்சை முகாம் நடத்தப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior