உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு: 19-ந் தேதி ஊர்வலம்

நெய்வேலி:
 
              நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறியது:-
 
           நெய்வேலி என்.எல்.சி.யில் சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தில் 9 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
 
              சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் என்.எல்.சி. நிறுவனம் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
 
             எனவே வருகிற 19-ந்தேதி மாலை 3 மணிக்கு நெய்வேலி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவது என்று முடிவு செய்துள்ளோம். இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் எப்போது ஈடுபடுவது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior