உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

வி.ஏ.ஓ., விண்ணப்பம் அனுப்ப கடலூர் தலைமை தபால் நிலையத்தில் குவியும் கூட்டம்

கடலூர்: 

               கடலூர் தலைமை தபால் நிலையத்தில் வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண் ணப்பம் அனுப்ப குவிந்தனர். டி.என்.பி.எஸ்.சி., மூலம் காலியாக உள்ள 2,653 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட் டுள்ளது. 

               குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு என்பதால் லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அனுப்பி வருகின்றனர். இது வரை மாநிலத்தில் 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வரும் 20ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் மூலர் 13 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

                    இதனால் தினமும் தபால் நிலைய அலுவலகங்களில் விண்ணப்பம் அளிப்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வரை கடலூர் தலைமை தபால் நிலையத்தில் மட்டும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. தினம் 500க்கும் மேற்பட்டவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வருகின்றனர். இதனால் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் தினமும் அதிகளவில் கூட்டம் கூடுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior