உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

அகில இந்திய கராத்தே போட்டி: குறிஞ்சிப்பாடி மாணவி இரண்டாம் இடம்

குறிஞ்சிப்பாடி: 

              ஐயப்பன் ஷீட்டோ ராய் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் 33ம் ஆண்டு அகில இந்திய கராத்தே போட்டியில் குறிஞ்சிப்பாடி மாணவி இரண்டாம் இடம் பெற்றார்.

                      வேலூரில் இயங்கி வரும் ஜப்பான் ஷிட்டோ ராய் கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் அகில இந்திய அளவிலான 33ம் ஆண்டு கராத்தே போட்டிகள் நடந்தது. வேலூர் ரீகா இயக்குனர் டாக்டர் அகமத் தலைமை வகித்தார். குருபிரசாத், டாக்டர் ரெட்டி முன்னிலை வகித்தனர். வேலூர் ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். ஜப்பான் கிராண்ட் மாஸ்டர் டோஷிரோ இணகாகி மாஸ்டர்ட் ஜக்கா கிபிகாஜி போட்டிகளை நடத்தினார். இதில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சென்சாய் கராத்தே பள்ளி மாணவி இனியால் கருப்புப் பட்டைப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்தார். மாணவியை சென்சாய் ராமமூர்த்தி, கண்ணதாசன் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior