உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

இமயமலையில் ஜோதி ஏற்றச் செல்லும் வள்ளலார் பக்தர்கள்

நெய்வேலி:

            இமயமலையில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஜோதி ஏற்றுவதற்காக சென்னையைச் சேர்ந்த ஞானாலயா கோட்டத்தின் உறுப்பினர்கள் வடலூரிலிருந்து திங்கள்கிழமை இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

                  சென்னையைச் சேர்ந்த ஞானாலயா கோட்டத்தின் சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள வள்ளலாரின் தெய்வ நிலையத்தில், வள்ளலார் அவதரித்த தினமான ஆகஸ்ட் 23-ம் தேதி ஜோதி ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டும் ஞானாலயா கோட்ட உறுப்பினர்கள் 60 பேர் கொண்ட குழுவாக ஞானாலயா நிர்வாகி திருஞானானந்தா சுவாமிகள் தலைமையில் இமயமலைக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தில் வழிபட்டுவிட்டு, பின்னர் சத்திய ஞானசபையில் பாராயணம் பாடி அதன்பின் புறப்பட்டுச் சென்றனர். நெய்வேலி ஆனந்தன், கடலூர் சஞ்சீவி வெங்கடேசன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior