உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

புதுதில்லி ஐஏசிஎம் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கல்வி ஒப்பந்தம்

சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புதுதில்லி ஐஏசிஎம் ஸ்மார்ட்லைன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து புதிய பட்டவகுப்புகளை தொடங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டுள்ளது.

              அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக புதுதில்லி ஐஏசிஎம் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்சி என்டர்பிரைஸ் நெட்வொர்க் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் மற்றும் எம்எஸ்சி என்டர்பிரைஸ் நெட்வொர்க் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் பட்ட வகுப்புகள், வரும் 2011-ம் கல்வி ஆண்டு முதல் தொடங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டது. 

                  துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலை. பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஐஏசிஎம் நிறுவனத் தலைவர் ரவீந்திரகாயல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டனர். தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், ஐஏசிஎம் நிறுவன சந்தீப்குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior