உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் மனுக்களுக்குப் பதில் இனிப்பு வழங்கிய விடுதலைச் சிறுத்தைகள்

கடலூர்:

            எப்போதும் கோரிக்கை மனுக்களையே வழங்கி வந்த விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியினர், கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்டும் கூட்டத்தில் மகிழ்ச்சியுடன் இனிப்பு வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

              வழக்கறிஞர் சு.திருமாறன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலராக பொறுப்பு ஏற்றபின், தாழ்த்தப்பட்ட மக்களின் பல்வேறு பிரச்னைகள், மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளன.திங்கள்கிழமைகளில் கடலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைகேட்கும் கூட்டங்களுக்கு, யார் வருகிறார்களோ இல்லையோ, திருமாறனும் அவரது கட்சி நிர்வாகிகளும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு கோரிக்கை மனுவுடன், தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டிக் கொண்டு வருவது வழக்கமான நிகழ்வாகும்.

              ஆனால் இந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்கும் கூட்டத்துக்கு சு.திருமாறனும் கட்சியின் ஏனைய தலைவர்களும், தொண்டர்களும் பெட்டி பெட்டியாக லட்டுகளுடன் வந்தனர். முதலாவதாக அலுவலர்கள் இருந்த அரங்கத்துக்குள் சென்று லட்டுகளை விநியோகித்தனர். எப்போதும் மனுக்களுடன் வரும் திருமாறன், லட்டுகளுடன் வந்தது அதிகாரிகளை வியக்க வைத்தது. அங்கிருந்து வெளியே வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, முன்னரே இனிப்பு வழங்கியதாக திருமாறன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior