உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

வாக்காளர் அடையாள அட்டை: போலிகளைக் களைய புதிய முறை

 

     ஒரே பெயரில் இரண்டு, மூன்று வாக்காளர் அட்டைகளை வைத்திருப்பவர்களைக் கண்டறியும் மின்னணு முறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்த உள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலக வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறின:

             தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மாவட்டங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மறுசீரமைக்கப்பட்ட தொகுதிகளின் விவரங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்ட விவரங்களுக்கு இதுவரை பதில் ஏதும் வரவில்லை. நவம்பரில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

               தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் வரப்பெற்றதும், அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்கப்படும்.மின்னணு முறை: சட்டப் பேரவைக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் செப்டம்பரில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.ஒரே பெயரில் இரண்டு, மூன்று இடங்களைக் குறிப்பிட்டு வாக்காளர் அடையாள அட்டைகள் புழக்கத்தில் இருந்தால் அவற்றைக் கண்டுபிடிக்க புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.

                  இந்த முறை இப்போது மாவட்ட அளவில் மட்டுமே உள்ளது. இது மாநில அளவில் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், ஒருவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து வைத்திருந்தால் அது கண்டறியப்படும் என தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior