உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

புற்றுநோய், இதயநோய் சிகிச்சைக்கு விரைவில் புதிய திட்டம்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கடலூர்:

          கிராமப்புற மக்களைத் தாக்கும் புற்றுநோய், இதய நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க 2 மாதத்தில் புதிய திட்டம் வர இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 கடலூர் அருகே திருச்சோபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 62 லட்சத்தில் கட்டப்பட்ட 30 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:

            தரம் உயர்த்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். விரைவில் 5 மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் உள்ள 1,539 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணிநேரமும் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட சுகாதார நிலையத்தில் எப்போதும் ஒரு மருத்துவர் இருப்பார். மற்றவற்றில் ஒரு செவிலியர் இருப்பார்.கடந்த 4 ஆண்டுகளில் 6,389 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவர்கள் நியமனத்துக்காக 25 முறை கவுன்சலிங் நடத்தப்பட்டு உள்ளது. 

           23, 24, 25 தேதிகளில், 26-வது முறையாக, 783 மருத்துவர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் நடைபெற இருக்கிறது.தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு தலா 6 ஆயிரம் வழங்குவதற்காக | 1,000 கோடி ஒதுக்கி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி. இதுவரை 20 லட்சம் போருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது.கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு இன்ன நோய் வந்து இருக்கிறது என்றுகூட, தெரிந்து கொள்ள முடியாத அவல நிலையிலும், அறியாமையிலும் உள்ளனர். 

              கிராமப்புற மக்களுக்காக இதயநோய், புற்றுநோய் (மார்பகப் புற்று நோய், கருப்பை  புற்றுநோய் உள்பட) ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம் 2 மாதத்தில் வரஇருக்கிறது.திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை ஜெயலிலதா ஆட்சியில் நிறுத்தினார். தற்போதும் திமுக ஆட்சியில் ரூ. 1-க்கு ஒருபடி அரிசித் திட்டம், "108' ஆம்புலன்ஸ் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசை வீடுகளுக்குப் பதில் காரை வீடுகள் வழங்கும் திட்டம் என, பல நல்ல திட்டங்கள்  நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

                  இந்தத் திட்டங்கள் தொடர மீண்டும் கருணாநிதி முதல்வராக வரவேண்டும் என்றார் அமைச்சர்.விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், சுகாதாரத் துறை இயக்குநர் பொற்கைப் பாண்டியன், துணை இயக்குநர் ஆர்.மீரா, சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜெயவீரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior