உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

783 புதிய டாக்டர்களை நியமிக்க கவுன்சிலிங்




               அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, 783 டாக்டர் பணியிடங்களை நிரப்ப, வரும் 23 முதல் 26ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்க உள்ளது.

சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

                அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் 6,503 டாக்டர்கள், 25 முறை கவுன்சிலிங் நடத்தி நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, 783 டாக்டர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதித்துள்ளது.

               இந்த பணியிடங்களை நிரப்ப, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்துள்ள நபர்களுக்கு, வரும் 23, 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் கவுன்சிலிங் நடக்க உள்ளது. சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள குடும்ப நலத்துறை பயிற்சி நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கவுன்சிலிங் நடக்கும்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்று மாலையே பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும். உத்தரவு பெற்றவர்கள் 15 நாட்களில் பணியில் சேர வேண்டும். அழைப்புக் கடிதம் வராதவர்கள், சுகாதாரத் துறை இணையதளத்தில் பட்டியலை பார்த்து, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior