உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 31, 2012

தமிழகத்தில் புதிய மின் கட்டணம் அமல் - உயர்த்தப்பட்ட கட்டண விபரம்

           தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய மின் கட்டணம் நடைமுறைக்கு வரவுள்ளது.        இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் வெள்ளிக்கிழமை வழங்கியது. இதன்படி, வீடுகள் உள்ளிட்ட குறைந்தழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டணம் ஒட்டுமொத்தமாக 45 சதவீதம் உயருகிறது. தொழிற்சாலைகள் உள்ளிட்ட...

Read more »

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 16 லட்சம் விண்ணப்பங்கள்

      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 16 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார்.      விண்ணப்பம் கோரும் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள்...

Read more »

நாட்டார்மங்கலம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா

கடலூர் :        நாட்டார்மங்களம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.        கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்களம் ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினம் மற்றும் 9 வார்டு பெண் உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 100 சதவீதம் பெண்களே பொறுப் பேற்றதால் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த டில்லி தமிழ்ச்சங்கம் டில்லிக்கு...

Read more »

வியாழன், மார்ச் 29, 2012

கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் "ஆபரேஷன் ஹாம்லா'

(1) கடலூர் தேவனாம்பட்டினத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார். (2) காரைக்கால் கடலோரப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார். கடலூர்:          கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.        ஆபரேசன் ஹாம்லா-2 என்ற...

Read more »

வாழைச் சாகுபடியில் புதிய சேமிப்பு முறைகள்

பதப்படுத்தப்படும் வாழைப்பழங்கள். பேக் செய்யப்பட்ட பழங்கள்.சிதம்பரம்:             வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டு தாவரங்களைக் கொண்ட பேரினமாகும். உலகம் முழுவதும் வாழையின் தேவை வெகுவாக அதிகரித்து வருகிறது. சுமார் 9.6 மில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ள வாழை சந்தையில் நமது பங்களிப்பு 0.01 சதவீதம்தான்.   ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை

கடலூர் :      பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றிட முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.      முன்பெல்லாம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்லும் போது துணிப்பை கொண்டு செல்வது வழக்கம். ஆனால், இன்று எண்ணெய் கூட பாலித்தின் கவரில் வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறிவிட்டது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்...

Read more »

முதியோர்களை ஆதரிப்பதில் கடலூர் மாவட்டம் முன்மாதிரி

கடலூர் :        ""முதியோர்களை ஆதரிப்பதில் கடலூர் மாவட்டம் முன்மாதிரியாக உள்ளது'' என மாநில மகளிரணி ஆணையத் தலைவர் கூறினார்.     மாநில மகளிர் ஆணையத்தில் கடந்த 2009 முதல் 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான ஆய்வுக் கூட்டம் நேற்று கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. மகளிர் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு, எஸ்.பி.,...

Read more »

சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரி சார்பில் ரத்ததான முகாம்

சிதம்பரம் :        சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரி என்.எஸ்.எஸ்., அரிமா சங்கம், சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.       கல்லூரியில் நடந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பழனிவேல், அரிமா ஆளுனர் கல்யாண்குமார், மாவட்டத் தலைவர் நாகப்பன், அரிமா சங்கத் தலைவர் ரமேஷ்சந்த், கல்லூரி நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் முன்னிலை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

விருத்தாசலம் :      கம்ப்யூட்டர் பயிற்சிக்கான இளைஞர்கள் தேர்வு முகாம் விருத்தாசலத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு புதுவாழ்வு திட்டம், மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் நோக்கத்துடன் விருத்தாசலம் பூதாமூர் சூரியா ஐ.டி.ஐ., யில் பயிற்சிக்கான இளைஞர்கள் தேர்வு முகாமை நடத்தியது.       முகாமிற்கு புதுவாழ்வு திட்ட...

Read more »

புதன், மார்ச் 28, 2012

என்.எல்.சி.க்கு தேசிய சுற்றுச்சூழல் விருது

நெய்வேலி:       நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் சிறந்த சுற்றுச்சூழலைப் பராமரித்து மின்னுற்பத்தி செய்தமைக்காக மத்திய மின்சக்தி அமைச்சகம் தேசிய சுற்றுச்சூழல் விருது வழங்கி கௌரவித்துள்ளது.    நெய்வேலியில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் மணிக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது....

Read more »

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க கோரிக்கை

கடலூர்:    அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், கடலூரில் தெருமுனைப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடந்தது.      அடிக்கல் நாட்டப்பட்ட கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். நிதி ஒதுக்கப்பட்டும் தொடங்கப்படாமல் இருக்கும் கடலூர் புறவழிச் சாலை திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கிடப்பில் போடப்பட்டு உள்ள சரவணன் நகர்...

Read more »

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் கல்லூரி தின விழா

கடலூர்:          கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் கல்லூரி தின விழா நடந்தது.தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியை நிர்மலா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரமாமணி ஆண்டறிக்கை வாசித்தார். முதன்மைச் செயல் அலுவலர் ஆனந்த், அறக்கட்டளை செயலர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார்.சிறப்பு விருந்தினராக பார்த்தசாரதி, கல்லூரி அறங்காவலர் ஞானசவுந்திரி கல்வித்திறன், விளையாட்டு...

Read more »

செவ்வாய், மார்ச் 27, 2012

கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில்பட்டமளிப்பு விழா

கடலூர்:       ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை, மாணவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்று ஊரகத் தொழில்கள் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார். கடலூர் புனித வளனார் கல்லூரி 18-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி, அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது:     கிராமப்புற...

Read more »

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் வினாடி வினா

காட்டுமன்னார்கோவில்:    காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு 4 நாள் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. நான்காம் நாள் கருத்தரங்கில் கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கை கல்லூரி சேர்மன் கதிரவன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பொறியியல் கல்லூரி கம்யூட்டர் துறை பேராசிரியர் ஜெயராஜ்,...

Read more »

பண்ருட்டி அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததானம் விழிப்புணர்வு கலந்துரையாடல்

பண்ருட்டி :     பண்ருட்டி அடுத்த அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது.   கல்லூரி முதல்வர் சவரிராஜ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட மேலாளர் கதிரவன், பண்ருட்டி அரசு மருத்துவமனை ஆலோசகர் ரமாதேவி, மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி...

Read more »

வியாழன், மார்ச் 22, 2012

கடலூர் முதுநகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வள மையம் திறப்பு விழா

முதுநகர் :        கடலூர் முதுநகர் அருகே தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வள மையம் திறப்பு விழா நடந்தது.         கடலூர், முதுநகர் அடுத்த மணக்குப்பத்தில் பி.ஏ.எஸ்.எப்., யு.என்.ஹாபிடாட் மற்றும் லியோனார்டு சேஷையர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த விழாவிற்கு பி.ஏ.எஸ்.எப்., நிறுவனத் தலைவர் பிரசாத் சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர்...

Read more »

புதன், மார்ச் 21, 2012

கடலூர் புனித வளனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் புனித வளனார் திருவிழா

கடலூர் புனித வளனார் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர் பவனியில் பங்கேற்ற அருள் தந்தையர்கள்.கடலூர்:         கடலூர் புனித வளனார் கல்வி நிறுவனங்கள் சார்பில், திங்கள்கிழமை புனித வளனார் திருவிழா கொண்டாடப்பட்டது.           கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் திருப்பாப்புலியூர் புனித வளனார்...

Read more »

நாள்காட்டியின் உதவியின்றி நாட்களை சொல்லும் நெய்வேலி இளைஞர்

சங்கரநாராயணன்.நெய்வேலி:           நெய்வேலியைச் சேர்ந்த எஸ்.சங்கரநாராயணன் (39), நாள்காட்டியின் உதவியின்றி கடந்த ஆண்டோ அல்லது நடப்பாண்டோ அல்லது அடுத்த ஆண்டிலோ ஏதேனும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு என்ன கிழமை என்றால் தெள்ளத் தெளிவாக, ஓரிரு வினாடிகளில் பதில் தருகிறார். இத்தனைக்கும் இவர் 1-ம் வகுப்போடு படிப்பை மறந்தவர்.இவர்...

Read more »

நாள்காட்டியின் உதவியின்றி நாட்களை சொல்லும் நெய்வேலி இளைஞர்

சங்கரநாராயணன்.நெய்வேலி:           நெய்வேலியைச் சேர்ந்த எஸ்.சங்கரநாராயணன் (39), நாள்காட்டியின் உதவியின்றி கடந்த ஆண்டோ அல்லது நடப்பாண்டோ அல்லது அடுத்த ஆண்டிலோ ஏதேனும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு என்ன கிழமை என்றால் தெள்ளத் தெளிவாக, ஓரிரு வினாடிகளில் பதில் தருகிறார். இத்தனைக்கும் இவர் 1-ம் வகுப்போடு படிப்பை மறந்தவர்.இவர்...

Read more »

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் இணையதளத்தில் வெளியீடு

      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.   ஆசிரியர் தேர்வு வாரியத்தின்    http://www.trb.tn.nic.in/            என்ற இணையதளத்தில் பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 3-ம்...

Read more »

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பெண்களுக்கு தொழில் உதவி

        கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 900 பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1 லட்சம் டாலர் நன்கொடை வழங்கவிருப்பதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித் துள்ளது.        இந்த நன்கொடை மூலமாக வால்மார்ட் பவுண்டேசன் மற்றும் கேர், கடலூர் பகுதியில் முந்திரி செயல்முறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கும், நீடித்திருக்கும் முந்திரி...

Read more »

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம்

நெய்வேலி:        என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.           பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு மார்ச் மாத தொடக்கத்தில் கரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நெய்வேலி பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் செயலராக இருந்த என்.இளங்கோவன்,...

Read more »

செவ்வாய், மார்ச் 20, 2012

கடலூர் தாலுகாவில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணி

நெல்லிக்குப்பம் :       கடலூர் தாலுகா காராமணிக்குப்பம், வெள்ளப்பாக்கம் பகுதிகளில் பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணி நடந்தது.         தமிழகம் முழுவதும் முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை உதவித் தொகைகள் தபால் நிலையம் மூலம் வழங்கப்படுகிறது. இதில் நடக்கும் காலதாமதம், முறைகேடுகளை தவிர்க்க பயோ மெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 4,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள கிராமங்களில்...

Read more »

திங்கள், மார்ச் 19, 2012

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

விருத்தாசலம்:         இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனர்.         இதேபோல், திராவிடர் மாணவர் கழகத்தினர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில்...

Read more »

கடலூர் பாடலேசுவரர் தொழில்நுட்பக் கல்லூரியில் எ ய்ட்ஸ் நோய் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி

கடலூர் :           கடலூர் பாடலேசுவரர் தொழில்நுட்பக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி நிறுவனத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். முதல்வர் ரமேஷ் பாபு வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர் கலைமதி முன்னிலை வகித்தார். செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், கல்லூரி துணை முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி...

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

கடலூர் :          கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். மகளிர் திட்ட கண்காணிப்பாளர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள் மாலதி, காஞ்சனா, தேவதாஸ் பொன்னையா சிறப்புரையாற்றினர். கள்ளச்சாராயம் மற்றும் போதை...

Read more »

ஞாயிறு, மார்ச் 18, 2012

திருமாந்துறையில் சிவன் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி-பேதி

  திட்டக்குடி:          திட்டக்குடியை அடுத்த திருமாந்துறையில் உள்ள சிவன் கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் திரளான ஆண்-பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அங்கனூரை சேர்ந்த கிராமத்தினர் சிலர் அந்த கோவில் பிரசாதத்தை பெற்று கொண்டு இரவில் வீடு திரும்பினார்கள்....

Read more »

சனி, மார்ச் 17, 2012

அரசுப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்

கடலூர்:          அரசுப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, விண்ணப்ப மனுக்கள் விநியோகம், கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.            தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,894 பேர் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். இவர்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய இருக்கிறது. இதற்கான எழுத்துத்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior