உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

100 நாள் திட்டத்தில் அமைத்த குளக்கரையை காணோம்: துண்டு பிரசுர போட்டியால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை :

                   சிதம்பரம் அருகே, 100 நாள் திட்டத்தில், புதிதாக அமைக்கப் பட்ட குளக்கரையை காணவில்லை என்று ஒரு தரப்பும், குளக்கரை கண்டுப்பிடிக்கப்பட் டது என்று மற்றொரு தரப்பும், துண்டு பிரசுரம் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

                    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, பெரியகுமட்டி கிராமத் தில் 100 நாள் வேலை திட்டத்தில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் நந்தவனம் குளம், சுடுகாட்டு குளம் புதிதாக அமைக்கப்பட் டது. குளத்தை சுற்றி, கரை பலப்படுத்தப்பட்டது. கிராமத்தை சேர்ந்த சிலர், குளத்தின் கரையில் இருந்த மண்ணை டயர் வண்டி மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் குளக்கரை பலவீனமடைந் துள்ளது. ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியவந்ததும், இனிமேல் குளக்கரையில் உள்ள மண்ணை யாரும் அள்ளக்கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த வாலிபர் சங்கத்தினர், "காணாமல் போனது பற்றிய அறிவிப்பு' என்ற தலைப்பில், 100 நாள் திட்டத்தில் அமைக்கப்பட்ட குளக்கரை காணவில்லை என்று, துண்டு பிரசுரத்தை கிராமம் முழுவதும் ஒட்டினர். அதைத் தொடர்ந்து, ஊராட்சி முன்னாள் உறுப்பினர் கோவிந்தசாமி என்பவர், பெரியகுமட்டி ஊராட்சியில், காணாமல் போன குளக்கரை கண்டுப்பிடிக்கப் பட் டது என, போட்டிக்கு துண்டுப் பிரசுரம் ஒட்டினார். இதனால் பெரியகுமட்டி பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. துண்டுப் பிரசுரம் ஒட்டியவர் கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊராட்சி தலைவர் ஜெய் சங்கர், பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக் டர் புகழேந்தி, ஏட்டு மாரியப்பன் ஆகியோர் பெரியகுமட்டி கிராமத் திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior