உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு : கலெக்டர்

கடலூர் :

                 ஊராட்சிக்கு ஆண்டிற்கு மூன்று லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் பிரதி மாதம் 25 ஆயிரம் வீதம் மானிய நிதி பிரித்து வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

                   உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு தன் சொந்த வருவாயிலிருந்து குறிப் பிட்ட தொகையை மாநில நிதிக்குழு மானியமாக வழங்கி வருகிறது. மாவட்ட ஊராட்சிக்கு மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கு குறைந்தபட்ச மானியத்துடன் மக்கள் தொகை அடிப்படையிலும் மானியம் சேர்த்து வழங்கப்படும்.

              ஒன்றியத்திற்கு குறைந்தபட்ச மானியம் ஆண்டிற்கு 30 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் பிரதிமாதம் 2.50 லட்சம் வழங்கப்படும்.ஊராட்சிக்கு ஆண்டிற்கு மூன்று லட்சம் ரூபாய் அடிப்படையில் பிரதி மாதம் 25 ஆயிரம் ரூபாய் பிரித்து வழங்கப்படும். தற்போது ஜனவரி 2010 மாதத்திற்குரிய மாநில நிதிக்குழு மானியம் மொத்தம் 4.10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior