உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

பெற்றோர் கண்ணெதிரில் வேன் மோதி குழந்தை பலி

குறிஞ்சிப்பாடி :

                குள்ளஞ்சாவடி அருகே பெற்றோர் கண் எதிரே வேன் மோதி குழந்தை இறந்தது. குள்ளஞ்சாவடி அடுத்த கோரணப்பட்டை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மூத்த மகன் லெனின்குமார்(4) சத்திரம் விவேகானந்தர் நர்சரி பள்ளியில் எல். கே.ஜி. படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு வேனில் சென்று வருவார். பள்ளி வேன் பழுதானதால் நேற்று காலை வாடகை வேன் வந்தது. லோகநாதன் மற்றும் மாணவர்கள் வேனில் ஏறியதும், டிரைவர் வேனை பின்னால் நகர்த்தினார். அப்போது ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த லோகநாதன் இரண்டாவது மகன் தருண்குமார் (2) மீது வேன் மோதியது. தடுமாறி விழுந்த சிறுவன் தருண்குமார் மீது வேனின் பின் சக்கரம் ஏறியது. அதில் படுகாயமடைந்த தருண்குமாரை அவர து பெற்றோர் காப்பாற்ற கடலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தருண்குமார் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior