உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

மராத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு கடலூரில் வரும் 22ம் தேதி மருத்துவ பரிசோதனை

கடலூர் :

                 சென்னையில் நடக்கும் மாநில அளவிலான மராத் தான் ஓட்டப்
போட்டிக்கான தேர்வு போட்டியில் பங்கேற்க உள்ளவர்களுக்கு 22ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மருத்துவப் பரிசோதனை நடக்கிறது.

இது குறித்து கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                     தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் பிப்ரவரி மாதம் சென்னையில் மராத்தான் ஓட்டப் போட்டி நடக்கிறது. இதற் காக கடலூர் மாவட் டத்தில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு போட்டி வரும் 24ம் தேதி கடலூரில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் டாக்டர்களிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எனவே இதற்கான மருத் துவ பரிசோதனை கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர்களை கொண்டு வரும் 22ம் தேதி மற்றும் 23 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. பங்கேற்கும் போட்டியாளர்கள், பள்ளிகள் தத் தம் போட்டியாளர்களுடன் குழுக்களாக வந்து மருத் துவ பரிசோதனை மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். போட்டியில் பங்கேற்பவர்கள் 24ம் தேதி காலை 6 மணிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆஜராக வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior