உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

என்.எல்.சி., நிர்வாகத்தை பலப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் வாசன் பேட்டி

பண்ருட்டி :

                    என்.எல்.சி., நிர்வாகத்தை பலப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.இது குறித்து அவர் பண்ருட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது: காங்., கட்சியில் ராகுல் காந்தி வருகைக்கு பின் தமிழகத்தில் 14 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். காங்., கட்சி தமிழகத்தில் முதலிடம் பெற எல்லா முயற்சிகளும் செய்து வருகிறோம்.

                       கட்சி தேர்தல் 3 மாதத் தில் நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பின் காங்., தமிழகத்தில் முதலிடம் பெற வாய்ப்புள்ளது. என்.எல்.சி., நிர்வாகத்தை பலப்படுத்த எல்லா முயற்சிகளும் செய்யப்படும். இதில் தொழிலாளர் பாதிக்காமல் அவர்களது நலன் பாதுகாக்கப்படும். நிசான் கார் கம்பெனியுடன் எண்ணூர் துறைமுகம் உடன்படிக்கை போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கார் எண்ணூர் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படஉள்ளது. மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் தரத்தை உயர்த்தியுள்ளது. கடந்த 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் மக்களுக்கான பல திட் டங்களால் 2009ல் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமைந் துள்ளது. மத்திய அரசு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத் திற்காக 39ஆயிரத்து 100 கோடி நிதி ஒதுக்கீடு செய் துள்ளது. இது கடந்த ஆண்டை விட 144 சதவீதம் கூடுதலாகும். கல்விக்காக 34 ஆயிரத்து 400கோடியும், சுகாதாரத்திற்காக 16 ஆயிரத்து 534 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior