உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

தினமும் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் முதல்வர் : எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பெருமிதம்

நெல்லிக்குப்பம் :

             பி.என். பாளையம் ஊராட்சியில் மட்டும் ஒரே நாளில் 50 லட் சம் ரூபாய் மதிப்பில் "டிவி'க்கள் வழங்குவதாக எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் கூறினார்.

                நெல்லிக்குப்பம் அடுத்த பி.என். பாளையம் ஊராட்சியில் இலவச டி.வி. வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் முத்தழகி தலைமை தாங்கினார். தாசில் தார் பாபு, பலராமன் முன்னிலை வகித்தனர். பாலகிருஷ்ணன் வரவேற்றார். பயனாளிகள் 2054 பேருக்கு இலவச "டிவி'க்களை வழங்கிய எம். எல்.ஏ. சபா ராஜேந்திரன் பேசியதாவது : இந்த ஊராட்சியில் மட்டும் ஒரே நாளில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள "டிவி'க்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. கருணாநிதி எவ்வளவு திட்டங்களை கொண்டு வந்த பிறகும் திருப்தியில்லாமல் தினமும் ஒரு திட் டத்தை அறிவித்து கொண்டே இருக்கிறார்.

                   பெண்கள் சிரமத்தை தவிர்க்க எரிவாயு இணைப்பு, உலக அறிவு பெற "டிவி' வழங்குகிறார். கூரை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்ற 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரும் திட்டத்தை கொண்டு வந்தார். நடப்பு ஆண்டிலேயே மூன்று லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டப்பட்ட சமுதாய கூடங்கள் பயன்படுத்தபடாமல் உள்ளது. இதுபோல் இல்லாமல் மக்கள் பயன்படுத்தினால் இங்கு சமுதாய கூடம் கட்டப்பட உள்ளது என்றார். மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் நடந்த விழாவில் ஆயிரத்து 691 பேருக்கு இலவச "டிவி'க் களை எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் வழங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, சடாட்சரம், செயல் அலுவலர் ராஜமாணிக் கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior