உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

26-ல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: பொதுநல அமைப்புகள் அறிவிப்பு

கடலூர்: 

                  சீர்குலைந்து கிடக்கும் கடலூர் நகரச் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, 26-ம் தேதி (குடியரசு தினம்) கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்த,பொதுநல அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

                        கடலூர் நகர பொது நல அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சிதைந்து கிடக்கும் சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். ரயில்வே சுரங்கப் பாதைப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 26-ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது.

                           வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கண்டனத்தைத் தெரிவிப்பது. இதுகுறித்து 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தெருமுனைப் பிரசாரம் செய்வது. ரயில்வே சுரங்கப்பாதை கோரி, போராட்டக் குழு முடிவு செய்யும் தேதியில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வது. இப்போராட்டங்களால் பயன் கிடைக்காதபோது, கடலூரில் முழுஅடைப்பு நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                      கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட பேருந்து போக்குவரத்து பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.குருராமலிங்கம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பி.பண்டரிநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் எம்.சேகர், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், தமிழ் தேசிய விடுதலை இயக்க மாநில துணைச் செயலாளர் திருமார்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior