உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூல்: அதிகாரிகள் குழு ஆய்வு துவங்கியது

கடலூர் :

                        தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், கட்டணங் ள் வசூல் குறித்த ஆய்வு துவங்கியது.

                      பள்ளி, கல்வி நிறுவனங்களில், முறையான கட்டணம் நிர் ணயம் செய்வதற்காக, நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன், பள்ளி கல்வி இயக்குனரகம் மூலம், அனைத்து மெட்ரிகுலேஷன், நர்சரி, சுய நிதி பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறும் சுய நிதி வகுப்புகள் ஆகியவற்றுக்கு, 40 பக்கங்கள் கொண்ட படிவம் வழங்கப்பட்டது. அதில், பள்ளியின் கட்டமைப்பு, பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் பற்றிய விவரம், வசூலிக்கப்படும் கட்டணம் உள் ளிட்ட பல்வேறு விவரங்கள் கோரப்பட்டிருந்தன. இப்படிவங்களை பூர்த்தி செய்து, சோதனைக்கு வரும் குழுவிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது.

                  இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல், அனைத்து பள்ளிகளிலும், அந்தந்த மாவட் டங்களைச் சேர்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர், வட் டார வள மைய மேற்பார்வையா ளர், அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என ஆறு பேர் வீதம் 11 குழுக் கள் அமைத்து ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. இதில், முக்கியமாக, பள்ளிகளில் மாணவ, மாணவியரிடமிருந்து வசூல் செய்த கட்டணத் தொகை முழு விவரம், ரசீது புத்தகங்கள், பள்ளி கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படுகின்றன. இவை தவிர, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, தொடக்கக் கல்வி மாவட்ட அதிகாரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் ஆகியோர் தலைமையிலான குழுவினர், தனியாக ஆய்வு செய்து வருகின்றனர். மூன்று நாள் தொடர் சோதனைக்குப் பின், வரும் 23ம் தேதி, ஆய்வறிக்கையை பள்ளி கல்வி இயக்குனர் மூலம், நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக் கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் முறையான கட்டணம் நிர்ணயம் செய் வது குறித்து, முடிவு செய்யப்படும் என தெரிகிறது.


பெற்றோர் ஆதங்கம்: 

                        பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து  அதிகாரிகளை நியமித்தால், முறையானதாக இருக்கும். ஆனால், அந்தந்த மாவட்டங்களில் சி.இ.ஓ., மூலம் அதிகாரிகள், ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பதால், கண்டிப்பான ஆய்வுப்பணி நடக்குமா என்பது கேள்விக்குறி தான். அதுமட்டுமின்றி, பெரும்பாலான பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்திற்கு ரசீதும், நன்கொடைக்கு துண்டு சீட்டும், ஒரு சில பள்ளிகளில் நிர்வாகத்தால் தனியாக அச்சிடப்பட்ட ரசீதும் கொடுக்கப்படுகிறது. ஆய்வில், வெறும் ரசீதை பார்த்து சோதனை செய்வதால், ஒரு பலனும் இல்லை என்பதே பெற்றோர்களின் ஆதங்கம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior