உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

குடியரசு தினத்தன்று கிராம சபை திரளாக பங்கேற்க வலியுறுத்தல்

கடலூர் :

                 குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிளிலும் குடியரசு தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத் தில் வரும் நிதியாண்டில் செய்ய வேண்டிய பணிகள் முடிவு செய்து அங்கீகாரம் பெற வேண்டும். ஏரிகள், குளங்கள், கால்வாய் பணிகள் (ஆழப்படுத்துதல் மற் றும் தூர் வாருதல்) தேர்வு செய்ய வேண்டும்.

                     தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து ஊராட்சிகளிலும் சமூக தணிக்கையின் பொருட்டு அக்டோபர் 2009 முதல் இன்றைய தேதிவரை உள்ள இத்திட்டத்திற்கான வருகைப்பதிவேடு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். தினசரி வருகை பதிவேட்டில் பொய்யான நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா? தனி நபர் அடையாள அட்டைகள் உரியவரிடம் இருக்க வேண்டும். அவ்வாறின்றி ஊராட்சி அலுவலகத்தில் உள்ளதா? அடையாள அட்டையில் தினசரி வருகை மற்றும் வாரந்தோறும் ஊதியம் வழங்குதல் குறித்த முறையான பதிவுகள் செய்யப்படுகிறதா? போன்ற கேள்விகள் கிராம சபைக் கூட்டத்தில் கேட்க வேண்டும். வரும் 26ம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொது மக்கள், சுய உதவிக்குழுவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior