உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

வணிக வளாகமாக திசைமாறி போகும் கடலூர் உழவர் சந்தை சீரமைக்கப்படுமா?

கடலூர் :

             கடலூர் உழவர் சந்தை சுய உதவிக்குழு போர்வையில் வணிக வளாகமாக மாறிக் கொண்டிருக்கிறது.

                  விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையே தரகரின்றி நேரடியாக உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனை செய்வதற்காக உழவர் சந்தை திட்டத்தை 1999ம் ஆண்டு தி.மு.க., அரசு அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக 100 உழவர் சந்தைகளை மாவட் டத் தில் முக்கிய இடங்களில் திறக்கப்பட்டது.  பின்னர் வந்த அ.தி.மு.க., அரசு உழவர் சந்தையை நடத்த ஆர்வம் காட்டவில்லை. அதனால் பல இடங்களில் உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து அறவே நின்றுபோனது. இருப்பினும் நகரின் மையப்பகுதியில் அமைந்த உழவர் சந்தைகளை மூட விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் உழவர் சந்தை சில இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேப்போன்று கடலூர் நகரில் மையப்பகுதியில் சந்தை அமைந்துள்ளதால் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

                      கடலூரில் உள்ள உழவர் சந்தையில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக விவசாயிகள் வரத்து குறைந்து வருகிறது. பதிலாக வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. தற்போது கடலூர் உழவர் சந்தையில் கரும்பு, மணிலா, வாழை வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க சுயஉதவிக்குழு என்கிற போர்வையில் தனியார்கள் மலைக்காய்கறிக் கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் விற் பனை செய்யும் காய்கறிகளின் விலையும் வெளிமார்க்கெட் விலையும் ஒரே மாதிரியாகவே உள்ளன. தற்போது உழவர் சந் தைக்குள் ஆவின், பிரியாணி ஓட்டல், பெட்டிக் கடை போன்றவைகளுக்கு அனுமதியளிக்கப்பட் டுள்ளன. இன்னும் ஏராளமான கட்சிக்காரர்கள் கடை கேட்டு விண்ணப் பித்துள்ளனர். ஏற்கனவே விவசாயிகள் போய் வியாபாரிகள் வந்துவிட்ட உழவர் சந்தை தற்போது வணிக வளாகமாக திசைமாறி கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகளை நியமித்து உழவர் சந்தையை கண்காணித்தால்தான் முதல்வரின் கொள்கை நிறைவேறும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior