உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை: பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி :

                   பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி அடுத்த தொரப்பாடி ஒன்றாவது வார்டு மேட்டாமேடு மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கும்பாபிஷேகம் தொடர்பாக கூட்டம் நடத்தினர். திருப்பணிக்கு கோவில் சார் பில் நடத்திய சீட்டு பணம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 960 ரூபாயை எடுத்துக் கொள்ளவும், கூடுதல் செலவை குடியிருப்புகளில் வரி வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

                      இதற்கு அதே பகுதியைச் சார்ந்த தங்கவேல் மற்றும் அவரது மகன்கள் அரங்கநாதன், கருப்பன், தனசுலிங்கம், ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைக் கண்டித்த சக்திவேல் என்பவரை, தங்கவேல் குடும்பத்தினர் தாக்கினர். தங்கவேல் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேட்டாமேடு பகுதியை சேர்ந்த 20 பெண்கள் உள்ளிட்ட 100 பேர் நேற்று காலை 11 மணியளவில் புதுப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உறுதியளித்தார். அதனையேற்று பகல் 12.30 மணிக்கு கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior