உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 20, 2010

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையில் டாஸ்மாக் மூலம் ரூ.7.30 கோடி சரக்கு விற்பனை

கடலூர் :

                   பொங்கல் பண்டிகையை யொட்டி கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 7.30 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனையாகியுள்ளது.தமிழகத்தில் மது விற்பனையை அரசே ஏற்று டாஸ்மாக் கடைகள் மூலம் நடத்தி வருகிறது. இதிலி ருந்து கிடைக்கும் பெருந் தொகையை வைத்து தான் அரசு பல் வேறு இலவச திட்டங் களை மக்களுக்கு வழங்கி வருகிறது.

                கடலூர் மாவட்டத்தில் 229 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மது அருந்துவதற்காக 49 பார் கள் செயல்பட்டு வருகின்றன.இவைத் தவிர தனியார் ஓட்டல்கள் மூலம் 13 மதுக்கடையுடன் பார்கள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் நிறுவனம் குடிப்பிரியர்களை வளைத்து போடுவதற்காக அவ்வப்போது பல புதிய மது வகைகள் அறிமுகப் படுத்தி வருகிறது. தற் போது 140க்கும் மேற்பட்ட மதுபான வகைகள் டாஸ் மாக் கடைகளில் விற் பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மூன்று டிஸ்டிலரிகளில் அரசு மதுபாட்டில்களை கொள் முதல் செய்து வந்தது. தற்போது விற்பனை அதி கரித்திருப்பதையொட்டி மேலும் இரண்டு டிஸ்டிலரிகளில் மதுபாட்டில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மதுபாட்டில்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட் டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 1.25 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. பண்டிகை காலங்களில் அதன் விற்பனை மும் மடங்காக அதிகரித்துள்ளது.

                 இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று நாள் விற்பனை "களை கட்டியது'. போகி பண்டிகையன்று 1.59 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. பொங்கலன்று இந்த விற்பனை இருமடங்காகி 2.80 கோடியாக உயர்ந்தது. மாட்டுப் பொங்கல் அன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் காணும் பொங்கல் அன்று மூன்று கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த மூன்று நாள் பண்டிகை காலங்களில் மொத்த விற்பனை 7.30 கோடி ரூபாய். கடந்த ஆண்டு பொங் கல் பண்டிகையின் போது 5.41 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.89 கோடி ரூபாய் கூடுதலாக விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior